ஓடும் இரயில் இருந்து இளைஞர் தூக்கி வீச்சு

இரயில் ஏற்ப்பட்ட தண்ணீர் பாட்டில் தாகராறினால் இளைஞர் ஒருவர் ஓடும் இரயில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

ரயில்வே
ஓடும் இரயில் இருந்து இளைஞர் தூக்கி வீச்சு

உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சியில் உள்ள லலித் போர் மாவட்டத்தில் ரவி என்பவர் தனது சகோதரியுடன் நேற்று முன்தினம் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது . தண்ணீர் பாட்டில் விற்கும் பேன்ட்ரி ஊழியருக்கும் ரவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதை எடுத்து ரவி லலித்பூர் ஸ்டேஷனில் இறங்க வேண்டியிருந்தது தற்போது தனது சகோதரி இறங்கிவிட்டார் ஆனால் பேட்டரி ஊழியர்கள் ரவியை இறங்கவிடாமல் தடுத்துள்ளார்கள் மேலும் ஓடும் ரயில் இருந்து தண்டவாளத்தை நோக்கி தூக்கி வீசியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தை தொடர்ந்து உள்ளூர் மக்கள் அவரை அங்கிருந்து மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஜான்சியில் உள்ள மருத்துவமனை கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அங்கு அவரது உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை நலமாக தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள். பிறகு ரவி அளித்த புகாரின் அடிப்படையில் பான்ட்ரி ஊழியர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 323 தன்னிச்சையாக காயப்படுத்துதல் பிரிவு 325 கடுமையான காயத்தை ஏற்படுத்துதல் மற்றும் 506 குற்றவியல் மிரட்டல் இது போன்ற பிரிவுகளில் கீழ் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளார்கள் மேலும் இது குறித்த விரிவான விசாரணை நடந்து வருவதாகவும் கூறி இருக்கின்றார்கள்

Leave a Comment